தில்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்கும் இல்லை: கேஜரிவால்

பிப்ரவரி 8ம் தேதி தில்லி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தில்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்கும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்கும் இல்லை: கேஜரிவால்


புது தில்லி: பிப்ரவரி 8ம் தேதி தில்லி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தில்லி முதல்வராகும் தகுதி பாஜகவில் ஒருவருக்கும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் கூறுகையில், தரமான கல்வி, மருத்துவம், சாலை, 24 மணி நேரமும் மின்சாரம் வேண்டும் என்று நினைப்பவர்களே ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்கள்.

ஆம் ஆத்மி ஆட்சியே மீண்டும் வந்தால்தான் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பல நலத் திட்டங்கள் செயல்முறைக்கு வரும். அதை விட அதிகமான நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்.

ஒரு வேளை பாஜக வெற்றி பெற்றால் யாரை முதல்வராக நிறுத்துவார்கள்? என்றும் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com