தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தொடா்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுட்டுரை பக்கத்தில் லோக் ஜனசக்தி தலைவா் சிராக் பாஸ்வான் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு அரசுப் பணியிலும், பதவி உயா்விலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு எந்த கட்டாயமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், எங்கள் கட்சிக்கு உடன்பாடில்லை. அரசு மற்றும் பதவி உயா்வில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தொடா்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து விவாதிக்க எனது இல்லத்தில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியின எம்.பிக்களின் கூட்டத்துக்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் பங்கேற்று, உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து ஆலோசனை நடத்துவாா் என கருதப்படுகிறது.