காக்கிச்சட்டைக்குள் ஈரம்: சக ஊழியரின் மகள் திருமணத்துக்கு நிதியளித்த தில்லி காவலர்கள்

புது தில்லியின் பரக்கம்பா சாலை காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தங்களுக்குள் நிதிதிரட்டி, சக ஊழியரின் மகள் திருமணத்துக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
Pre wedding medical tests
Pre wedding medical tests


புது தில்லி: புது தில்லியின் பரக்கம்பா சாலை காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தங்களுக்குள் நிதிதிரட்டி, சக ஊழியரின் மகள் திருமணத்துக்கு நிதியுதவி செய்துள்ளனர்.

காவல்நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் பெண் ஊழியரின் மகள் திருமணம் பிப்ரவரி 12ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த பெண் ஊழியர், தனது மகளின் திருமண செலவுக்குப் பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியைப் போட்டு சுமார் ஒரு லட்சம் திரட்டி, பெண் ஊழியரிடம் அளித்தனர்.

திருமணச் செலவுக்கு பணமில்லாமல் இருந்த நிலையில், இந்தப் பணத்தைக் கொண்டு மகளை கன்னியாதானம் செய்து கொடுத்தார் பெண் ஊழியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com