உத்தரப்பிரேத சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.
உத்தரப்பிரேத சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உரை நிகழ்த்தினார். அப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது-