காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது. இந்திய ராணுவமும் அவர்களுக்கு பதிலடி அளித்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமுற்றனர்.