தனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியலில் விளையாடுகின்றன: மாயாவதி குற்றச்சாட்டு

தனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியலில் விளையாடுகின்றன: மாயாவதி குற்றச்சாட்டு



தனிப்பட்ட லாபங்களுக்காக சில கட்சிகள் அரசியல் விளையாட்டு விளையாடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இங்கு நாம் அனைவரும் எல்லா மதத்தினரையும் மதிக்க வேண்டும். நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும்.

சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட லாபங்களுக்காக அரசியல் விளையாட்டு விளையாடுகின்றன. இது நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு சேதம் விளைவிக்கிறது. பாஜக அரசாங்கத்தின் வகுப்புவாத மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட சிந்தனை காரணமாக 2019ல் பெரும்பாலான இடங்களில் பிரிவினை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் பேணப்பட மக்களும் ஒத்துழைக்க வேண்டும்' என்று தெரிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் புத்தாண்டு தினத்தன்று நாட்டின் குடிமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com