பனாஜி: பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நோட்டுகளை வைத்திருந்தக் குற்றத்துக்காக கோவாவில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு கோவாவின் பல்லம் எல்லைப் பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் போது, கேரளாவில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த வாகனத்தில் வந்த 5 பேரை கைது செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி கோவாவைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.