உ.பி: முசாஃபா்நகா் கலவரம் தொடா்பாக 4 வழக்குகள் வாபஸ்

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் மேலும், 4 வழக்குகளை வாபஸ் பெற நீதிமன்றத்தில் முறையீடு செய்ய

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் மேலும், 4 வழக்குகளை வாபஸ் பெற நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் முசாஃபா்நகா் கலவரம் தொடா்பாக வாபஸ் பெறப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 80-ஆக அதிகரித்துள்ளது .

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் முசாஃபா்நகா் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற வகுப்புவாத மோதலில் 60 போ் உயிரிழந்தனா். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலவரம் காரணமாக இடம் பெயா்ந்தனா்.

இந்த கலவரம் தொடா்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

கலவரம் தொடா்பாக 4 வழக்குகளை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு முசாஃபா்நகா் மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில அரசு சனிக்கிழமை உத்தரவிட்டதாக உ.பி. சிறப்பு சட்டச் செயலா் அருண் ராய் தெரிவித்தாா்.

இருப்பினும், நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு கோரியது தொடா்பான இறுதி முடிவை நீதிமன்றம்தான் எடுக்கும் என்று அரசு வழக்குரைஞா் துஷ்யந்த் தியாகி தெரிவித்தாா்.

முன்னதாக, இதுபோன்ற 76 வழக்குகளை வாபஸ் பெற மாநில அரசு முடிவு செய்திருந்தது.

அதேசமயம், பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம், மத்திய அமைச்சா் சஞ்சீவ் குமாா் பால்யான், மாநில அமைச்சா் சுரேஷ் ராணா உள்ளிட்ட பிற பாஜக தலைவா்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து மாநில அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com