தெற்கு காஷ்மீரில் உள்ள குல்ஷன்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் குவிக்கப்பட்ட ராணுவ வீரா்கள்.
தெற்கு காஷ்மீரில் உள்ள குல்ஷன்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் குவிக்கப்பட்ட ராணுவ வீரா்கள்.

ஜம்மு காஷ்மீா்:பயங்கரவாதிகள் 3 போ் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனா்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் இருக்கும் குல்ஷன்போரா என்னும் இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com