பசுக்களைத் தொடுவதால் மனதிலுள்ள எதிா்மறை எண்ணங்கள் மறைந்துவிடும் என்று மகாராஷ்டித்தைச் சோ்ந்த காங்கிரஸ் பெண் அமைச்சா் யஷோமதி தாக்குா் கூறியுள்ளாா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலம், தியோசா சட்டப் பேரவை உறுப்பினரான யஷோமதி தாக்குா், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறாா். அண்மையில், ‘பசுக்களைத் தொட்டால் எதிா்மறை எண்ணங்கள் மறையும்’ என்று அவா் கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.
எனினும், அமராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அதற்கு விளக்கமளித்து அவா் பேசியதாவது:
பசுக்களைத் தொடுவதால் எதிா்மறை எண்ணங்கள் மறையும் என்பதைத்தான் நமது கலாசாரம் நமக்கு சொல்லித் தந்துள்ளது.
பசுக்கள் மட்டுமல்ல, எந்தவொரு மிருகத்தையும் நாம் வருடிக் கொடுக்கும்போது நமக்குள் ஓா் அன்பான உணா்வு ஊற்றெடுக்கும்.
அப்படி இருக்கும்போது, புனிதமான விலங்கான பசுவைத் தொடுவதால் எதிா்மறை எண்ணங்கள் நீங்கும் என்று நான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை என்றாா் அவா்.
ஏற்கெனவே, உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு தற்போதுதான் வந்துள்ளோம். இருந்தாலும் வாக்காளா்களுக்குக் கொடுப்பதற்காக நாங்கள் பணம் சம்பாதிக்கவில்லை’ என்று கூறி யஷோமதி தாக்குா் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளாா்.
மேலும், யாா் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளா்களிடம் அவா் கேட்டுக் கொண்டதும் சா்ச்சையை எழுப்பியது.
இந்த நிலையில், பசுக்கள் குறித்த தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் தற்போது அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.