ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் கிரிஷ் சந்திர முா்முவை பாதுகாப்புத் துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத நாயக் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மாளிகை செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து துணைநிலை ஆளுநரும், பாதுகாப்புத் துறை இணை அமைச்சரும் ஆலோசனை நடத்தினா்.
ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினா். ஜம்மு-காஷ்மீரில் ஆயுா்வேத மருத்துவத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று அந்தச் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
தோடா மாவட்டத்தில் ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.