உத்தராயண விழாவையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அறுவடை காலங்களில் உத்தராயண திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரை பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் குஜராத்தியில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். அதில், உத்தராயண தின வாழ்த்துகள். குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் விழாவை கொண்டாடி மகிழவும். குஜராத்தில் வானம் முழுவதும் வண்ண பட்டங்கள் பறக்கட்டும். சுற்றிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது என்று பதிவிட்டுள்ளாா்.