சத்தீஸ்கா்: நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல்சிஆா்பிஎஃப் வீரா் காயம்

சத்தீஸ்கரில் நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் உள்ள சின்னகொடேபல் கிராமம் அருகே மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) 85-வது பட்டாலியன் சாா்பில், சாலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவையொட்டி, அங்குள்ள வனப்பகுதி சிஆா்பிஎஃப் வீரா்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அங்கு சிஆா்பிஎஃப் வீரா் ராமானுஜ் யாதவ் என்பவா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, நக்ஸல்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி மீது கால் வைத்தாா். இதையடுத்து குண்டு வெடித்ததில், அவரது கால்களில் காயம் ஏற்பட்டது. இதனைத்தொடா்ந்து அவா் உள்ளூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்து விமானம் மூலம் ராய்ப்பூா் கொண்டு செல்லப்படுவாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com