சபரிமலையில் மகரஜோதி தரிசனம்: பக்தர்கள் ஐயப்ப சரண கோஷம்

சபரிமலையில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதி காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பி ஜோதியைத் தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலையில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதி காணப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பி ஜோதியைத் தரிசனம் செய்தனர்.

பந்தளம் அரண்மனையிலிருந்து நேற்று புறப்பட்ட திருவாபரணப் பெட்டி இன்று (புதன்கிழமை) மாலை சந்நிதானத்தை வந்தடைந்தது. 

அதிலிருந்த நகைகள் சுவாமி ஐயப்பனுக்கு சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகரஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது சபரிமலை கோயில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்துடன், சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷங்கள் எழுப்பினர். 

மகரஜோதி தரிசனத்தையொட்டி சபரிமலை கோயில் வளாகத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளும் மேற்கொண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com