2019-ஆம் ஆண்டில் 56 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பிரச்னைக்குரிய இடங்களுக்கு வெளியே இறந்தனர் என்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட பாதி குறைந்துவிட்டது, ஆனால் குற்றவாளிகள் கிட்டத்தட்ட மொத்த தண்டனையையும் அனுபவித்ததாகபுள்ளிவிவரங்களைத் மேற்கோளிட்டு சின்குவா செய்தி நிறுவனம் திங்களன்று தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை திங்களன்று 'கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் பட்டியல் என யுனெஸ்கோ ஆய்வகத்தில்' வெளியிடப்பட்டது.
மொத்தத்தில், யுனெஸ்கோ 2010 முதல் 2019 வரையிலான தசாப்தத்தில் 894 பத்திரிகையாளர் கொலைகளை பதிவு செய்தது, இது ஆண்டுக்கு சராசரியாக 90 ஆகும். 2019-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 99-ஆக இருந்தது.
உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி 22 கொலைகள், ஆசிய - பசிபிக் நாடுகளில் 15, அரபு நாடுகளில் 10 கொலைகள் என பதிவு செய்யப்பட்டுள்ளன.
"ஊடகவியலாளர்கள் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் போது, வன்முறை மோதலை எதிர்கொள்ளும் போது தீவிர ஆபத்துக்களைச் சந்திக்கிறார்கள். இவை மட்டுமல்லாமல், உள்ளூர் அரசியல், ஊழல் மற்றும் குற்றங்கள் குறித்து புகாரளிக்கும் போது அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களில்தான் அதிகப் பிரச்னையைச் சந்திக்கிறார்கள்" என்று யுனெஸ்கோ கூறியது.
2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு (61 சதவீதம்) ஆயுத மோதலை அனுபவிக்காத நாடுகளில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 இன் நிலைமை தலைகீழானது, இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக இருந்தது.
2019 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் பத்திரிகையாளர்களைப் பற்றியதுதான்.
இந்த புள்ளி விவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில், யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசெளலே கூறினார்: " உலகெங்கிலும் உள்ள பல பத்திரிகையாளர்களுக்கு எதிராக இருக்கக் கூட விரோதம் மற்றும் வன்முறையால் யுனெஸ்கோ ஆழ்ந்த கலக்கத்தில் உள்ளது.
"இந்த நிலைமை நீடித்தால், அது ஜனநாயகத்துக்கு இழுக்காகும்." என்றார்.