உ.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
உ.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் ஷாஜாத் நகர் பகுதியைச் சேர்ந்த பதின்வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவாகரத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்னதாக, சிறுமியின் பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்க மறுத்துள்ளனர். உறவினர்கள் ஒரு சிலர் வற்புறுத்தலுக்குப் பிறகே அவர்கள் போலீஸில் புகார் கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com