தெலங்கானா மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை தொடங்கியது. மொத்தம் 120 நகராட்சிகள் மற்றும் 9 மாநகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
யாதாத்ரி மாவட்டத்தின் போங்கிரியில், மாவட்ட ஆட்சியர் அனிதா ராம்சந்திரனா வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோல் விகாராபாத் மற்றும் போங்கிர் ஆகிய இடங்களில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.