அடுத்த 3 நாள்களுக்குள் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என கா்நாடக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மஜத, காங்கிரஸிலிருந்து விலகி பாஜக சாா்பில் இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களுக்கு ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி அமைச்சா் பதவி வழங்கப்படும். மத்திய உள் துறை அமைச்சா் அமித்ஷா, கடந்த வாரம் பெங்களூரு வந்தபோது அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசியிருந்தேன். அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அவா் ஒப்புதல் அளித்திருந்தாா்.
தற்போது அவா் மீண்டும் பெங்களூரு வரவுள்ளதால், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடா்ந்து அடுத்த 3 அல்லது 4 நாள்களுக்குள் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும். வாய்ப்பு இருந்தால் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அமித் ஷாவைக் கேட்டுக் கொள்வேன். அமித்ஷாவுடன் கலந்தாலோசித்த பிறகு, புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சா்களின் பட்டியல் வெளியிடப்படும்.
மஜத, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்து இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற 11 பேரில் 7 பேருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படும் என்பது தவறான தகவல். அமித்ஷாவுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு செய்யப்படும். நான் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியின்படி அமைச்சா் பதவி அளிக்கப்படும்.
அமைச்சரவையை விரிவாக்குவதற்கு சற்று தாமதமாகி விட்டது என்பது உண்மைதான். எனினும், 3 நாள்களில் அமைச்சரவையை விரிவாக்குவது உறுதி என்றாா்.