இந்தியா
நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது,
நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம். அதனை ஒருபோதும் மாற்ற முடியாது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும். நீட் தேர்வு கட்டாயம் என்ற விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளனர்.