புதுதில்லி: கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ள மத்திய அரசு உதவி எண் அறிவித்துள்ளது.
சீனாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு கட்டுப்பாட்டு அறையை தொடங்கி இருக்கிறது.
அந்த கட்டுப்பாட்டு அறையின் எண் +91-11-23978046 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறையும், பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
மேலும் சீனாவுக்கு அத்தியவாசமற்ற முறையிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.