43 வருடங்களுக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

43 வருடங்களுக்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரஜினிகாந்த்

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான...

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா்.

இது நீர் மேலாண்மைக் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகும். சினிமாவில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தின் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று டிஸ்கவரி சேனல் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் டிவியில் அறிமுகமாகிறேன்" என்று இந்தப் படப்பிடிப்பு பற்றி ரஜினிகாந்த் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com