புது தில்லி: வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,
மகிழ்ச்சி மற்றும் புதுப்பித்தல் திருவிழாவான வசந்த பஞ்சமியை முன்னிட்டு, எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
“ஞானத்தின் புனித அன்னையாகக் கருதப்படும் சரஸ்வதி தேவி, நம் அனைவருக்கும் அறிவு ஒளி மற்றும் ஞானத்தைக் கொடுக்கட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.