கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"கேரளத்தில் இன்று புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4593 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,130 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளத்தில் 124 கரோனா ஹாட்ஸ்பாட்-கள் உள்ளன."