ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். முன்னதாக, இதே மாவட்டத்தில் திங்கள்கிழமை மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அனந்த்நாக் மாவட்டத்தின் வாகாமா பகுதியில் பயங்கரவாதிகள் சிலா் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா். சிறிது நேர மோதலுக்குப் பிறகு இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யாா்? எந்த பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அங்கு தொடா்ந்து தேடுதல் வேட்டையும் நடத்தப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.