தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,373 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 2,373 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 92,175 ஆகவும், பலி எண்ணிக்கை 2,864 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 3,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 63,007 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 26,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.