ஜூலை 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 31 ஆம் தேதி வரை  சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 31 ஆம் தேதி வரை  சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை 15 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பரவல் குறையாததால், ஜூலை 31 வரை சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. 

மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, விமான சேவை படிப்படியாக அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை மத்திய அரசின் விதிமுறைகளுடன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com