இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா சோதனை
கரோனா சோதனை

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60.77% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து  மொத்த பாதிப்பு 6,73,165 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று மேலும் 613 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 19,268 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 14,856 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,09,082 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குணமடைவோர் விகிதம் 60.77% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 2,44,814 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 1,64,268 அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com