தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி பேசி வருகிறார்.
இந்த சந்திப்பில் சர்வதேச, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக சீனாவுடன் எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.