உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,346 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி உத்தரப் பிரதேச சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்ததாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,346 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 9,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 19,627 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 827 ஆக உள்ளது.
நேற்று மட்டும் 30,329 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 9,22,049 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன."