மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய அந்த மாநில செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 6,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,30,599 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 219 பேர் பலியானதையடுத்து பலி எண்மிக்கை 9,667 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 4,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,27,259 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 93,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் இறப்பு விகிதம் 4.19 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 55.19 சதவிகிதமாக உள்ளது.