மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை அப்படியே எதிர்கொள்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர், மரணத்தை கூட பயமில்லாமல் எதிர்கொண்டனர் அவர்கள் இருவரும் அச்சமில்லாமல் வாழ்வதும் வேலை செய்வதும் எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளனர்.
எனவே மோடி அரசு எப்படியெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதனை துணிவுடன் அப்படியோ எதிர்கொள்ளவோம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.