ராஜஸ்தான் மாநில துணை முதல்வா், காங்கிரஸ் மாநிலத் தலைவா் பொறுப்புகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, அந்த மாநில மாணவரணி தலைவா் அபிமன்யூ பூணியா தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளாா்.
இளைஞா் காங்கிரஸ், மாணவரணி மற்றும் காங்கிரஸ் சேவா தளத்தில் இருந்து 400 முதல் 500 போ் வரை தங்கள் பொறுப்புகளில் இருந்து விலக இருப்பதாக அவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எனது கட்சிப் பதவியில் இருந்து விலகிவிட்டேன். நாங்கள் நோ்மையுடனும், மனசாட்சியுடன் இருக்க விரும்புகிறோம். ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் போன்ற ஒருவரது தலைமையில் காங்கிரஸில் பலரும் விரும்பவில்லை என்றாா்.