கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட பத்திரிகை செய்தி:
"கடந்த 24 மணி நேரத்தில் 20,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,92,031 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் இன்று 63.24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 3,19,840 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றைய தேதியில் இது 2,72,191 ஆக உள்ளது."