மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,641 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் இன்றைய (வியாழக்கிழமை) செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,641 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 266 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,84,851 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,58,140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11,194 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 1,14,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 55.63 சதவிகிதமாக உள்ளது.
மும்பை:
மும்பையில் இன்று புதிதாக 1,498 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 97,751 ஆக உயர்ந்துள்ளது. இதில் 68,537 பேர் குணமடைந்துள்ளனர், 5,520 பேர் பலியாகியுள்ளனர். 23,694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.