தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,349 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா நிலவரம் பற்றிய இன்றைய (செவ்வாய்க்கிழமை) செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,349 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,25,096 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,690 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று 1,200 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,0,118 பேர் குணமடைந்துள்ளனர்.
தில்லியில் நேற்று ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவான நிலையில், இன்று மீண்டும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.