மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,369 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதித்தோர், பலியானோர், குணமடைந்தோர் எண்ணிக்கைகள் அடங்கிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,369 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 246 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,27,031 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,82,217 பேர் குணமடைந்துள்ளனர். 1,32,236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 995 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 62 பேர் பலியாகியுள்ளனர், 905 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,03,262 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 73,555 பேர் குணமடைந்துள்ளனர், 5,814 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

தாராவியில் இன்று புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,502 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இன்றைய தேதியில் அங்கு 151 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com