தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,227 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய இன்றைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,227 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,26,323 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,07,650 பேர் குணமடைந்துள்ளனர். 3,719 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் 14,954 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இன்று மட்டும் 20,060 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 8,71,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.