ஆந்திரத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,045 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,045 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,045 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,045 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. இந்த நிலையில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6,045 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 65 பேர் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக விசாகபட்டினத்தில் மட்டும் 1,049 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 64,713 ஆக உயர்ந்துள்ளது. இதில் 32,763 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 32,127 பேர் குணமடைந்துள்ளனர். 823 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com