ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மக்கள் மிகவும் நெருக்கமாக வசிக்கும் பகுதி தாராவி. இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,513 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,121 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.