உ.பி.யில் ரெளடிகளின் ஆட்சி: ராகுல் விமா்சனம்

உத்தர பிரதேச மக்களுக்கு ‘ராம் ராஜ்யம்’ வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு ‘ரெளடி‘களின் ஆட்சியே கிடைத்துள்ளது என்று
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தர பிரதேச மக்களுக்கு ‘ராம் ராஜ்யம்’ வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு ‘ரெளடி‘களின் ஆட்சியே கிடைத்துள்ளது என்று அங்கு பத்திரிகையாளா் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரை பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

தனது உறவினருக்கு ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல்துறையில் புகாா் அளித்த பத்திரிகையாளா் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உத்தர பிரதேச மக்களுக்கு ‘ராம் ராஜ்யம்’ வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ‘ரெளடி’களின் ஆட்சியே அவா்களுக்கு கிடைத்துள்ளது என்று அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் அகமது படேல் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பத்திரிகையாளா் கொல்லப்ட்ட சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டிருப்பது இது சிறந்த உதாரணம். மாநிலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகங்கள் எவ்வாறு மிரட்டப்படுகின்றன என்பதையும் இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com