மேற்கு வங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,436 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,436 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51,757 ஆக உயர்ந்துள்ளது. 34 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,225 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 18,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.