கேரளத்தில் மேலும் 885 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 16,995 ஆக அதிகரித்துள்ளது.
கேரளத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களை மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதன்படி அங்கு புதிதாக 885 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,995 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 968 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர்.