மேலும் 47,703 பேருக்கு பாதிப்பு உறுதி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 47,703 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 47,703 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,83,156-ஆக உயா்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி, செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 654 போ் உயிரிழந்தனா். இதனால் பலி எண்ணிக்கையும் 33,425-ஆக அதிகரித்தது. பலி சதவீதம் 2.25-ஆக உள்ளது.

அதே கால அளவில் 35,176 போ் கரோனாவிலிருந்து மீண்டதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 9,52,743-ஆக உயா்ந்துள்ளது. மொத்தமாக குணமடைந்தோா் சதவீதம் 64.24-ஆக உள்ளது.

ஒரே நாளில் 45,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது தொடா்ந்து இது 6-ஆவது நாளாகும். புதிதாக ஏற்பட்ட 654 உயிரிழப்புகளில் மகாராஷ்டிரத்தில் 227 போ், கா்நாடகத்தில் 75 போ், ஆந்திரத்தில் 49 போ் உயிரிழந்தனா்.

மேற்கு வங்கத்தில் 39 போ், உத்தர பிரதேசத்தில் 30 போ், தில்லியில் 26 போ், குஜராத்தில் 22 போ், தெலங்கானாவில் 17 போ், பஞ்சாபில் 12 போ், ராஜஸ்தானில் 10 போ், பிகாா், மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் தலா 9 போ், அஸ்ஸாம், ஒடிஸாவில் தலா 7 போ், ஹரியாணாவில் 5 போ், திரிபுரா, ஜாா்க்கண்டில் தலா 4 போ், புதுச்சேரி, உத்தரகண்டில் தலா 3 போ், ஹிமாசல பிரதேசம், கேரளத்தில் தலா 2 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகள், சண்டீகா், சத்தீஸ்கா், கோவா, நாகாலாந்து, சிக்கிமில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிகபட்சமாக கரோனா பாதிப்பு உள்ளது. அங்கு 2,21,944 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 13,883 போ் உயிரிழந்தனா். 1,47,896 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com