தில்லியில் புதிதாக 1,093 பேருக்கு கரோனா

​தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
​தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
​தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,093 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 1,093 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,34,403 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,19,724 பேர் குணமடைந்துள்ளனர். 3,936 பேர் பலியாகியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 10,743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லியில் இதுவரை மொத்தம் 10,13,694 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com