மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 11 ஆயிரம் பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11,147 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11,147 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11,147 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 11,147 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மாநில சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 11,147 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 266 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 8,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,11,798 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,48,615 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 1,48,150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துள்ளது. எனினும் அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை மேலும் குறைந்து 80 ஆகியுள்ளது. இதுவரை 2,220 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com