கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா இலவசம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா தானம் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா தானம் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 

அதே நேரத்தில் பிளாஸ்மாவை வாங்கவோ விற்கவோ அனுமதி இல்லை என்றும் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டணம் ஏதுமின்றி பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், கரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், மாநிலத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே தனது அரசின் முன்னுரிமை என்றார்.

தற்போது, மாநிலத்தில் 4,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் 10,213 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், 361 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com