இந்தியா
ஆந்திரத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 10,000-க்கும் மேல் கரோனா பாதிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,376 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 10,376 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு புதிதாக 10,376 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு 1,40,933 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திரத்தில் இதுவரை மொத்தம் 1,349 பேர் பலியாகியுள்ளனர், 63,864 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் அங்கு 75,720 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.