2019-2020 ஆண்டுகளில் 14 கோடி பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்: ப.சிதம்பரம்

2019-2020 ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளான தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை
கோப்புப்படம்
கோப்புப்படம்


2019-2020 ஆண்டுகளில் 14 கோடி பேர் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளான தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தொலைத்தொடர்பு, விமான போக்குவரத்துத் துறைகளுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு, விமான போக்குவரத்து துறை குலைந்தால்  இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்து விடும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது.

விமானப் போக்குவரத்துத் துறையில் மூன்று பெரிய தனியார் நிறுவனங்களும் ஏர் இந்தியாவைப் போல் பயணிகளும் இல்லாமல் பணமும் இல்லாமல் முடங்கும் நிலைக்கு வந்திருக்கின்றன.

2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று இப்பொழுது தொலைதொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்து என இரண்டு முக்கிய துறைகளிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்து  விட்டது என்று நான் பல நாட்களாகச் சொல்லிவருகிறேன். தொலை தொடர்பு துறையில் ஒரு பெரிய நிறுவனம் விரைவில் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை என்று சிதம்பரம் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com