போதைக்காக சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 7 பேர் பலி

ஆந்திரத்தில் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திரத்தில் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியில் போதைக்காக சிலர் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்துள்ளனர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com