ஆந்திரத்தில் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்து 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியில் போதைக்காக சிலர் சாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்துள்ளனர். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.