உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதனால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது எனச் சுட்டிக்காட்டிய மாநில அரசு புதிய அபராத முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்முறை தவறிழைத்தால் ரூ.1000 அபராதமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தவறிழைத்தால் ரூ.10 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் இயக்குவது அபராதத்திற்குரிய குற்றமாக கருதப்பட்டு ரு.1000 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சாலை அபராதங்கள் மத்திய அரசின் சமீபத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.